
முதல் பிரச்னை என்ன
இந்த போட்டியில் ரிஷப் பண்ட், தனது கீப்பிங் க்ளவுசில் விரல்களை சேர்த்து வைத்து டேப் ஒட்டியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக டேவிட் மாலனின் விக்கெட் வீழ்ந்த நேரத்தில் கள நடுவர்கள் இதனை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கேப்டன் கோலியிடம் தெரிவித்து கிளவுசில் இருந்த டேப்பினை அகற்றினர்.

புதிய சர்ச்சை
இந்நிலையில் தற்போது பண்ட் குறித்து மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த போட்டியின்போது ரிஷப் பண்ட்டிற்கு எதிராக அம்பயர்கள் எடுத்த ஒரு முடிவு தான் அதற்கு காரணம். இன்றைய போட்டியின் போது இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்துக்கொண்டிருந்தார். பல்வேறு ஓவர்களுக்கு தொடர்ந்து இதையே தான் அவர் செய்து வந்தார்.

நடுவர்களின் தவறான கருத்து
அதனை கவனித்த அம்பயர்கள் இனிமேல் நீங்கள் கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். அதன்பிறகு ரிஷப் பண்ட் கிரீசுக்குள் நின்றவாறு பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பிறகு ஏன் நான் கிரீசுக்கு உள் நின்று விளையாட வேண்டும் என்று பண்ட் கேள்வி எழுப்பியதற்கு நீங்கள் வெளியே நின்று விளையாடுவதால், பிட்ச்-ல் சில முக்கிய இடங்கள் சேதமடைவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே நீங்கள் உள்ளே நிற்க வேண்டும் என நடுவர்கள் கூறி இருக்கிறார்கள்.

கொந்தளித்த கவாஸ்கர்
இந்நிலையில் நடுவர்களின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஒரு பேட்ஸ்மேனை எப்படி நடுவர் கட்டுப்படுத்த முடியும். ஒரு போட்டியில் எங்கு நின்று விளையாட வேண்டும் என்பது பேட்ஸ்மேனின் தனிப்பட்ட முடிவு. அவர் எங்கு நின்று வேண்டுமானாலும் விளையாடுவார். ஒரு பேட்மேனின் தனிப்பட்ட முடிவில் அம்பயர் நுழையக்கூடாது. ரிஷப் பண்ட் எங்கே நிற்க வேண்டும் என்று அம்பயர் கூறியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

சரமாரி கேள்வி
கிரீசுக்கு வெளியே நின்றால் பிட்ச் சேதமடையும் என்று கூறுகிறீர்கள். ஒரு வேளை ஸ்பின்னர் போடும்போது பேட்ஸ்மேன் முன் இறங்கி வந்து ஆடுகிறார்கள். அப்போது மட்டும் பிட்ச் சேதமடையாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதே போல சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும், நடுவரின் இந்த முடிவு தவறானது. இப்படி ஒரு விதிமுறை கிடையாது எனக்காட்டமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications