
4வது டெஸ்ட் டாஸ்
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஓவல் மைதான பிட்ச்சானது, முதல் 3 நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் எனவும் 4 மற்றும் 5வது நாளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகும் எனத்தெரிகிறது. எனவே முதலில் பவுலிங் செய்து இந்திய அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட ரூட் திட்டமிட்டுள்ளார்.

பேட்டிங் வரிசை
இந்த போட்டிக்காக இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை சட்டீஸ்வர் புஜாரா கடந்த போட்டியில் தனது ஃபார்மை நிரூபித்துவிட்டதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ரகானேவுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 போட்டிகளிலும் ரகானேவின் ஃபார்ம் மோசமாக இருந்தது. எனினும் அவர் மீது கோலி நம்பிக்கை வைத்துள்ளார்.

பவுலிங்
பவுலிங் படையில் தான் அந்த 2 மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அணிக்குள் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்திய அணி ப்ளேயிங்11
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, கோலி, ரகானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


Click it and Unblock the Notifications











