
4வது டெஸ்ட் போட்டி
இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் இன்று முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஹெட்டிங்லி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது. வெற்றிக்காக இரு அணிகளும் தீவிர முணைப்புடன் இருப்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ப்ளேயிங் 11ல் மாற்றங்கள்
இங்கிலாந்து களத்தில் சிறப்பாக செயல்படுவார் எனக்கூறப்படும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே முக்கியமானதாக பார்க்கப்படும் 4வது டெஸ்டில் கண்டிப்பாக இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.

மீண்டும் குழப்பம்
அனைவரும் எதிர்பார்த்தப்படியே சீனியர் வீரர் இஷாந்த் சர்மா அணியின் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். எனினும் அஸ்வின் அணியில் இணைவது குழப்பத்தில் உள்ளது. அதற்கு காரணம் ஷர்துல் தாக்கூர். இந்திய அணியின் லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கு உதவ வேண்டும் என்ற காரணத்தை கூறி தான் அஸ்வின் முதல் 3 போட்டிகளில் நீக்கப்பட்டார். மீண்டும் அதே பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது.

வானிலை அறிக்கை
ஷர்துல் தாக்கூர் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் உதவுவார். ஏற்கனவே சில போட்டிகளில் அவரின் பேட்டிங் திறமை நிரூபனம் ஆகியுள்ளதால், அவரை அணிக்குள் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. எனினும் லண்டன் வானிலை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், அஸ்வின் அணியில் இணைக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications











