மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் என்று அறியப்பட்ட ரஹானே தற்போது அணியில் இடமே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அவர் கடைசியாக கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார்.
ரஹானே கேப்டனாக இருந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவில் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார்.அணியில் இருந்து இடத்தை இழந்தவுடன் மீண்டும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி அணிக்கு சென்றார்.
