
சொதப்பல்
இந்திய அணியின் 2வது இன்னிங்ஸில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும், பொறுமையாக ஆடிய ரஹானே 61 ரன்களும், மிகவும் பொறுமையாக ஆடிய புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா, ரிஷப் பண்ட், இஷாந்த் ஷர்மா ஆகியோர் விரைவாக வெளியேறி விட்டனர்.

பும்ரா - ஷமி பார்ட்னர்ஷிப்
இதனையடுத்து களமிறங்கிய முகமது ஷமி - பும்ரா ஜோடி பேட்டை சுழற்றி ரன்களை சேர்க்க ஆரம்பித்ததோடு, டெஸ்ட்டில் தங்களது அதிகபட்ச ரன்களையும் எட்டினர். இதில் ஷமி சிக்ஸரோடு அரை சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இந்தியா 271 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து பவுலர்கள் பும்ராவை கடுமையாக தாக்கிய போது அவர், நிலைத்து நின்று ஷமிக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தது வியக்கவைத்தது.

கோலி போட்ட திட்டம்
இந்நிலையில் அவர்கள் ஓய்வறைக்கு திரும்பும் முன்பு, அணி வீரர்களுக்கு விராட் கோலி கூறிய திட்டத்தை அஸ்வின் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், பும்ரா - ஷமி உணவு இடைவெளிக்கு திரும்புகின்றனர் என்பது தெரிந்தவுடன், விராட் கோலி எங்களிடம் வந்து, அனைவரும் கீழே சென்று அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்க வேண்டும். நாம் எழுப்பும் சத்தம் இன்னும் பல வருடங்களுக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துங்கள் என தெரிவித்தார்.

அதிர்ந்து போன லார்ட்ஸ்
கோலி கூறியபடியே பெரும் விசில் சத்தத்துடனும், கைத் தட்டல்களுடனும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்ட இந்திய அணி அடுத்ததாக 3வது டெஸ்டுக்கு தயாராகி வருகிறது. இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் ஹெட்டிங்லேவில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











