பயிற்சி ஆட்டம்
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 /8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 33 ரன்களுக்கெல்லாம் அவுட்டானார். ஆனால் அவரின் விக்கெட் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றிய விராட் கோலி
இந்நிலையில் இந்த போட்டியில் கோலியின் பேட்டிங் பெரியளவில் இல்லையென்றாலும், அவர் செய்த செயல்கள் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக ஜோ ரூட் செய்த ஒரு மேஜிக்கை கோலியும் முயற்சி செய்திருந்தார்.
ஜோ ரூட் மேஜிக்
நியூசிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜோ ரூட், தனது பேட்டை எந்தவித பேலன்ஸும் இன்றி தரையில் நிற்க வைத்துவிட்டார். ரன் ஓடுகையில் மட்டும் அவர் பேட்டை எடுத்துக்கொண்டு சென்றார். எப்படி ஒரு பேட் தானாக நின்றுக்கொண்டிருக்கிறது என ரசிகர்கள் புரியாமல் குழம்பியிருந்தனர்.
விராட் கோலி முயற்சி
இதே போன்று விராட் கோலியும் பேட்டை நிற்கவைத்து பார்க்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனையடுத்து சிரித்துக்கொண்டே அவர் நகர்ந்து சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.