
முதல் டெஸ்ட் போட்டி
விராட் கோலிக்கு முதல் டெஸ்டில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ரகானே தலைமை தாங்குகிறார். அதன்படி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலக்கிய கே.எல்.ராகுல் ஓப்பனிங் களமிறங்குகிறார். அவருடன் மயங்க் அகர்வால் ஜோடி சேர்வார் எனத்தெரிகிறது. முதல் விக்கெட்டிற்கு புஜாரா களமிறங்க, தற்போது விராட் கோலியின் இடத்தை பூர்த்தி செய்ய தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

2 வீரர்களிடையே போட்டி
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதே போல இந்தியாவுக்காக இதற்கு முன்னர் அசத்தியுள்ள சுப்மன் கில்லையும் 4வது வீரராக களமிறக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரில் யார் ப்ளேயிங் 11ல் இருப்பார்கள் என்ற கேள்வி தான் இன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

புஜாரா கருத்து
இந்நிலையில் சுப்மன் கில் தான் இடம்பெறுவார் என துணைக்கேப்டன் புஜாரா வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சுப்மன் கில் ஒரு சிறந்த வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.துரதிர்ஷ்ட வசமாக இங்கிலாந்து தொடரை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் நிச்சயம் சுப்மன் கில் விளையாடுவார். ஆனால் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பதை இப்போது தெரிவிக்க முடியாது.

டிராவிட் இருக்கிறார்
சுப்மன் கில்லின் ஃபார்மை பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வாறு விளையாடினாரோ அதேபோன்று இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார். ராகுல் டிராவிட் அணியில் இருப்பதால், அவரிடம் இருந்து சுப்மன் கில்லுக்கு நல்ல அறிவுரைகள் கிடைக்கும் என புஜாரா கூறியுள்ளார். முதலில் இந்த இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் தான் களமிறக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் ஏமாற்றத்தில் இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications