கலீல் 2 விக்கெட்கள்
கலீல் அஹ்மது முதல் டி20யில் அதிக ரன்கள் கொடுத்தார். மேலும், விக்கெட்டும் வீழ்த்தவில்லை. தன் குறைகளை நிவர்த்தி செய்த கலீல், இரண்டாம் போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
கோலியை அணி மிஸ் செய்கிறதா?
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க அணி சார்பில் கலீல் அனுப்பி வைக்கப்பட்டார். இளம் வீரரான கலீல் அஹ்மது சற்று பதற்றத்தில் இருந்தார். பின்னர், ஓய்வில் இருக்கும் கோலியை இந்திய அணி மிஸ் செய்கிறதா என்ற கேள்வி கேட்கப் பட்ட போது சிரிப்பை அடக்க கஷ்டபட்டார் கலீல்.
இந்த கேள்வி வேண்டாம்
பின்னர், இந்த கேள்வி வேண்டாம், அடுத்த கேள்வி கேளுங்கள் என கூறி அதில் இருந்து தப்பித்தார். உண்மையில் இந்த கேள்வியில் சிரிப்பை வரவழைக்கும் எந்த விஷயமும் இல்லாத நிலையில் கலீல் ஏன் அப்படி சிரித்தார்?
ஆஸி தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது
கலீல் அஹ்மது ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்ற போது, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்றார். அந்த போட்டியில் அவர் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கவே, அடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
நம்பிக்கை வைத்த ரோஹித்
அதே சமயம், நியூசிலாந்து டி20 தொடரில் ரோஹித் தலைமையில் ஆடிய போது முதல் போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த போதும், இரண்டாம் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் ரோஹித் சர்மா. அந்த போட்டியில் தான் கலீல் தன் திறமையை காட்டினார்.
என்ன நடக்கிறது அணியில்?
ஒருவேளை இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் கோலியின் தொடர் அணி மாற்றங்களை விரும்பவில்லையோ? அதனால் தான் கோலியை மிஸ் செய்கிறீர்களா என கேட்ட போது கலீல் இப்படி செய்தாரா?