For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எங்கள விட்டுடுங்க” கோலி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.. பரிதாப நிலையில் நியூசி, வீரர்கள்!

மும்பை: கோலி கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் நியூசிலாந்து வீரர்கள் கதிகலங்கி நின்றுள்ளனர்.

Recommended Video

Virat Kohli, Dravid visit NZ's dug-out, congratulate history-maker Ajaz Patel | Oneindia Tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேவில் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 345 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

2வது நாள் ஆட்டமான இன்று இந்திய அணியில் ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுணையில் தூண் போன்று நின்று விளையாடிய ஓபனர் மயங்க் அகர்வால் 150 (311) ரன்களும், அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 52 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

பிட்ச்-ல் திடீர் மாற்றம்

பிட்ச்-ல் திடீர் மாற்றம்

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியில் ரன்கள் சேர்வதற்குள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. குறிப்பாக ஓபனர் டாம் லதாம் 10 (14) மற்றும் கெயில் ஜேமிசன் 17 (36) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 263 ரன்கள் பின்தங்கியது.

கோலி எடுத்த முடிவு

கோலி எடுத்த முடிவு

இதனால் இந்திய அணி பாலோ ஆன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் விராட் கோலி, நாங்கள் பேட்டிங் செய்யவுள்ளோம் என அறிவித்தார். இதனால், ஒன்றரை நாள் தொடர்ந்து பந்துவீசிய நியூசிலாந்து அணி மீண்டும் தொடர்ந்து பந்துவீச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 40 ஓவர்கள் மேல் போட்ட அஜாஸ் பட்டேல் மீண்டும் 10 ஓவர்களுக்கு மேல் வீசினார். எப்போதுதான் இன்றைய நாள் முடிவடையும் என்பது போல மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.

2வது நாள் முடிவு

2வது நாள் முடிவு

2வது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் ஓப்பனர்களக மயங்க் அகர்வால்38 (75), சேத்தேஸ்வர் புஜாரா 29 (51) ஆகியோர் களமிறங்கி சிறப்பாக விளையாடினர். இதனால் 2வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 69/0 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணியை விட 332 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

Story first published: Saturday, December 4, 2021, 18:56 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
Team India Opening pair hold a India 69/0 in second innings at stumps, lead by 332 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+