ரிஷப் பண்ட் குறித்து கேள்வி
அந்த வரிசையில், தற்போது நியூசிலாந்து தொடரிலும், இதற்கு முன் ஆஸ்திரேலிய தொடரிலும் ஒருநாள் அணியில் இடம் பெறாத இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து கேள்வி எழுப்பினார் மைக்கேல் வான்.
ஏன் வாய்ப்பு இல்லை?
தன் பதிவில், "ரிஷப் பண்ட் ஏன் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு பெறுவதில்லை?" என ஒரு கேள்வி கேட்டார். இதற்கு ஒருவர் நெத்தியடி பதில் கொடுத்து வாயடைக்க வைத்துள்ளார்.
சரியான பதிலடி
அந்த நபர் தன் பதிலில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பிடிக்காததன் காரணத்தை இப்படி கூறியுள்ளார். "உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் அவரை அணியில் சேரவிடவில்லை" என கூறி உள்ளார். அதாவது, நிகரற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தோனி அணியில் இருப்பதால், ரிஷப் பண்ட் வாய்ப்பு பெறவில்லை என்பதை கூறியுள்ளார்.
பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்
தோனியால் தான் ரிஷப் பண்ட் அணியில் வாய்ப்பு பெறவில்லை என்பது உண்மை தான் என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக மட்டும் வாய்ப்பு பெற்றார். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.