
தொடரை கைப்பற்றிய
இரு அணிகளும் மோதும் போட்டி நாளை மாலை ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ன் சொந்த ஊரான இங்கு அதிரடிக்கு பஞ்சம் இருக்காது எனத்தெரிகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிவிட்டால் 3 டி20 போட்டிகள் கொண்ட டொடரில் 2 வெற்றிகளுடன் இந்திய அணி கைப்பற்றும்.

கூடுதல் பலம்
இந்நிலையில் இந்திய அணியினருக்கு கூடுதல் பலமாக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பங்கேற்கவுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த தோனி, தற்போது ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். ஆனால் இன்று திடீரென ஜே.எஸ்.சி. ஏ மைதானத்தில் வருகைப்புரிந்தார். அங்கு இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியினரை சந்தித்தார். மேலும் அங்குள்ள டென்னிஸ், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களுக்கு சென்று வந்தார்.

இந்திய அணி பலம்
இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள 2வது டி20 போட்டியிலும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த தோனி கலந்துக்கொள்வார் என எதிர்பார்கப்படுகிறது. இதே போல இளம் வீரரான ரிஷ பண்ட்,

தோனி பங்கேற்ப
நாளை தனது சொந்த ஊரில் நடைபெறும் தனது திறமையை நிரூபித்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. தோனி இருந்தால், அந்து இன்னும் எளிதாக இருந்திருக்கும் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











