துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9வது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நடப்பு தொடரில் மட்டும் 3 முறை இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்தியா. திலக் வர்மா கடைசி ஓவரில் சிக்சர் அடித்து அபாரம்
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் 19.1 ஓவரில் ஆல் அவுட் ஆனது. 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
16வது ஓவரில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
7 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கீதம் பாடப்பட்டது. இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கவில்லை.
பாகிஸ்தான் XI: ஃபகர் ஜமான், சாஹிப்ஜாதா ஃபர்ஹான், சைம் ஆயூப், சல்மான் அலி ஆகா (கேப்டன்), ஹுசைன் தலத், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஷா ஆஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது
இந்தியா XI: அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகல். சிவம் துபே அணிக்கு திரும்பினார். ரிங்கு சிங்கும் அணிக்குள் வந்தார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது