
விராட் கோலி பேட்டிங்
இந்திய அணியின் தூணான விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக எந்த வடிவ கிரிக்கெட்டிலும் சதம் காணவில்லை. அவரின் 71வது சதத்தை பூர்த்தி செய்வதற்கான காத்திருப்பு நீண்டுக் கொண்டே செல்கிறது. எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலாவது அது நிறைவேறுமா என ரசிகர்கள் காத்துள்ளனர்.

கோலி சதம் உறுதி
இந்நிலையில் அவர்களுக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நற்செய்தி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விராட் கோலி மிகவும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்யக்கூடியது 2 மைதானங்களில் தான். அதில் ஒன்று கேப்டவுனில் உள்ள நியூலாண்ட் மைதானம். இங்கு அவரின் ஆட்டமே வேறு மாதிரியாக இருக்கும். இதனை நான் நன்கு அறிவேன். தென்னாப்பிரிக்காவில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதத்தை கூட அவர் அடிக்காமல் நான் பார்த்ததே இல்லை.

வெற்றி வாய்ப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் ஒரு சதமாவது நிச்சயம் உள்ளது. போட்டியை பொறுத்தவரையிலும் இந்திய அணி தான் வெற்றி பெறும். முதல் 2 போட்டிகளும் பார்ல் மைதானத்தில் நடப்பதால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். எனவே 2 -1 என இந்தியா தொடரை கைப்பற்றும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

என்ன காரணம்
மோர்னே மார்க்கல் கூறியதை போன்றே பார்ல் மைதானம் இந்தியாவுக்கு சாதகமானது தான். இந்த களத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 300+ ரன்கள் அடிப்பது பெரும் சிரமமாக இருக்காது எனக் கூறப்படுகிறது. இந்திய அணியில் கே.எல்.ராகுலின் கேப்டன்சி இன்னிங்ஸ், ஷிகர் தவான், விராட் கோலி கம்பேக், வெங்கடேஷ் ஐயரின் அதிரடி என பலமாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications