
2வது டெஸ்ட்
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஓப்பனிங் ஜோடியான கேப்டன் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் நிதானமாக ரன்களை சேர்த்தனர். எனினும் அந்த ஜோடியால் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. மயங்க் அகர்வால் 26 ரன்களுக்கு நடையை கட்டினார்.

மீண்டும் சொதப்பல்
இதன் பின்னர் களமிறங்கிய சீனியர் வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா 33 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்களுக்கு நடையை அவுட்டானார். ரகானே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. மீண்டும் ஒருமுறை சொதப்பியதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

பொறுப்பான ஆட்டம்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேற மறுமுணையில் தூணை போன்று நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
இதனால் இந்திய அணி 116 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் சர்ஃபரைஸ் கொடுத்தார். 50 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினார். இதன் பின்னர் டெயில் எண்டர்கள் ஓரளவிற்கு ரன்களை சேர்க்கஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Recommended Video

தென்னாப்பிரிக்கா
குறைவான ஸ்கோரில் இந்திய அணியை சுருட்டிய நம்பிக்கையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி கொடுத்தார் முகமது ஷமி. அவரின் ஓவரில் ஏய்டன் அக்ரம் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 35 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.


Click it and Unblock the Notifications











