For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“திடீர் காயம்” 2வது டெஸ்டில் இருந்து பாதியில் விலகும் நட்சத்திர பவுலர்.. இந்தியாவுக்கு பின்னடைவு!

ஜோஹனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முகமது சிராஜ் காயத்தால் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று ஜோஹனஸ்பர்க்கில் தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

சிராஜுக்கு காயம்

சிராஜுக்கு காயம்

பேட்டிங்கில் தான் அதிர்ச்சி கொடுத்தது என்று பார்த்தால், முதல்நாள் ஆட்ட நேர முடிவில் பவுலிங்கிலும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு திடீரென காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. களத்திலேயே வலி தாங்க முடியாமல் இருந்த சிராஜ், உடனடியாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

காயத்தின் தன்மை என்ன

காயத்தின் தன்மை என்ன

இதனால் இன்று நடைபெறும் 2வது நாள் ஆட்டத்தில் சிராஜால் பங்கேற்க முடியுமா, பவுலிங் செய்ய முடியுமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தொடையின் பின் பகுதியில் தசை பிடித்திருந்ததால், அது குணமடைய சில நேரங்கள் எடுக்கும் எனவும் உடனடியாக களத்திற்குள் சென்றால் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறினர். எனினும் பிசிசிஐ இந்த விவகாரத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அஸ்வினின் பதில்

அஸ்வினின் பதில்

இந்நிலையில் சிராஜின் காயம் குறித்து பேசியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், நான் பிசியோதெரபிஸ்ட் உடன் பேசினேன். காயம் ஏற்பட்ட உடன் தசைப்பிடிப்பு பகுதியில் ஐஸ் வைத்து பார்த்துள்ளனர். அதன் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்று இரவு முழுவதும் முகமது சிராஜ் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் இன்று களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

2வது டெஸ்டில் இன்னும் 4 நாட்கள் மீதமுள்ளன. ஒருவேளை முகமது சிராஜால் களமிறங்க முடியவில்லை என்றால் ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் தான் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்த வேண்டும். சிராஜ் இல்லாததால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அதிக ஓவர்கள் வீச வேண்டிய வாய்ப்பு கிடைக்கும்.

Recommended Video

Ashwin Stunned With Shardul Thakur’s 5 Wicket Haul In Johannesburg | OneIndia Tamil
ஆட்ட எதிர்பார்ப்பு

ஆட்ட எதிர்பார்ப்பு

தென்னாப்பிரிக்க அணி முதல் நாளின் முடிவு வரை 35 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து நிதானமாக விளையாடி வருகிறது. இந்தியாவை விட முன்னிலை பெறுவதற்கு இன்னும் 167 ரன்கள் தேவை என்ற சூழல் உள்ள நிலையில், இந்திய பவுலர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இன்றைய நாளில் ஸ்விங் நன்றாக இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

Story first published: Tuesday, January 4, 2022, 13:59 [IST]
Other articles published on Jan 4, 2022
English summary
Ravichandran Ashwin Gives an update on Mohammed Siraj's injury for India vs South africa 2nd test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+