5வது டி20 போட்டி
இந்த தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு வித்தியாசமாக தான் அமைந்துள்ளது. முதல் 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியும், அடுத்த 2 போட்டிகளில் அபார வெற்றியையும் பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த 4 போட்டிகளிலுமே ஒரே ப்ளேயிங் 11 உடன் தான் களமிறங்கியுள்ளது.
புது சிக்கல்
இந்நிலையில் 5வது டி20ல் இந்திய அணிக்கு சிக்கல் உண்டாகியுள்ளது. அதாவது கடந்த 4 போட்டிகளிலுமே டாஸில் தோல்வியடைந்த ரிஷப் பண்ட், இன்று நிச்சயம் டாஸ் வெல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு காரணம் பிட்ச்-ல் ஏற்படப்போகும் திடீர் மாற்றம் தான். போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிட்ச் நிலைமை
பெங்களூரு மைதானத்தில் வழக்கமாக அதிக ஸ்கோர் ஆட்டமாக தான் இருக்கும். இங்கு முதலில் பந்துவீசும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம். அதுவும் இன்று மாலை பெங்களூரு நகரத்தில் நல்ல மழை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது. பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சிரமமாக இருக்கலாம்.
ஸ்கோர்களின் விவரம்
இங்கு சராசரியாக முதலில் பேட்டிங் செய்யும் அணி 150 முதல் 160 ரன்கள் வரை தான் சேர்க்கிறது. 2வதாக பேட்டிங் செய்யும் அணியால் 190+ ரன்கள் என்ற இலக்கை கூட விரட்ட முடியும். எனவே ரிஷப் பண்ட் இன்று எப்படியாவது டாஸை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.