For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அத மட்டும் சரி செஞ்சா வேற லெவல்”.. ரிஷப் பண்ட் கேப்டன்சியின் தவறுகள்.. ஜாகீர் கான் பளீச் பேச்சு!

மும்பை: இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் செய்யும் தவறுகள் குறித்து முன்னாள் வீரர் ஜாகீர் கான் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள சூழலில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

பண்ட் மீது விமர்சனங்கள்

பண்ட் மீது விமர்சனங்கள்

முதல் 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் அட்டகாசமான கம்பேக் கொடுத்தது. இதனால் விமர்சனங்களுக்கும் முற்றிப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் மீது மட்டும் இன்னும் விமர்சனங்கள் ஓய்ந்த பாடில்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

நடப்பு தொடரில் ரிஷப் பண்ட்-ன் கேப்டன்சி சரியில்லை என கூறுகின்றனர். முதல் 2 போட்டிகளில் அக்‌ஷர் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஏன் டாப் ஆர்டரில் களமிறக்கவில்லை. பவுலர்களை சரியாக ரொட்டேட் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் குவிந்தன.

Recommended Video

IND vs SA வெற்றிக்கு பிறகு Rishabh Pant சொன்ன விஷயம் | *Cricket
ஜாகீர் கான் பேச்சு

ஜாகீர் கான் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து ஜாகீர் கான் பேசியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் ரன்கள் அடிக்கும் போது, ரசிகர்கள் அவரை பற்றி பேசுகின்றனர். அவர் அடிக்கவில்லை என்றாலும் பேசுகின்றனர். அவருக்கு சில கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவரின் கேப்டன்சி வித்தியாசமாக அமைந்துள்ளது.

 என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

எப்போதுமே கட்டத்தை விட்டு, வெளியே யோசிக்கிறார். வியூகங்களை விட, அவரின் உள்ளுணர்வுகளை மட்டுமே அவர் அதிகம் பின்பற்றுகிறார். இதற்காக பல ரிஸ்க்-களும் எடுக்கப்படுகின்றனர். அவரிடம் உள்ள ஒரே பிரச்சினை, ரிஸ்க் எடுக்கும் போதெல்லாம், அதனை சரிசெய்யும் திட்டத்தை பண்ட் வைத்துக்கொள்ளவில்லை. அதை சரி செய்ய வேண்டும் என ஜாகீர் கான் கூறியுள்ளார்.

 இன்று கட்டாயம்

இன்று கட்டாயம்

இதே போல பேட்டிங் மிக மோசமாக அமைந்துள்ளது. கடந்த 4 போட்டிகளில் 29, 5, 6, 17 ஆகிய ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இதனால் ரிஷப் பண்ட்-ஐ டி20 தொடரில் இருந்து நீக்கிவிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டே தீர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Story first published: Sunday, June 19, 2022, 13:02 [IST]
Other articles published on Jun 19, 2022
English summary
India vs south africa 5th t20 ( இந்தியா vs தென்னாப்பிரிக்கா 5வது டி20 ) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட்-ன் கேப்டன்சி குறித்து ஜாகீர் கான் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+