கொரோனா விழிப்புணர்வுடன் அணி
இந்தப் போட்டியை எப்படி எதிர்கொள்வது என்பதை விட கொரோனா குறித்த விழிப்புணர்வில் இந்திய அணி உள்ளது. கேப்டன் விராட் கோலி முதல் அனைத்து வீரர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனராம். இந்த நிலையில்தான் போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கிளம்பிய சஹல், ஒரு போட்டோவைப் போட்டுள்ளார்.
|
மாஸ்க்கோடு கிளம்பினார் சஹல்
அந்தப் போட்டியில் சஹல் முகமூடியுடன் காணப்படுகிறார். தான் தர்மசாலாவுக்குக் கிளம்பி விட்டதாக கூறியுள்ள அவர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் மாஸ்க் அணிந்து பக்காவாக இருப்பதையும் அவர் புகைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். வழக்கமாக கிரிக்கெட் வீரர்கள் கார்டு போட்டுக் கொண்டுதான் ஆடுவார்கள். இப்போது முகமூடிக்குத் தாவியுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா கை குலுக்காது
இதற்கிடையே, போட்டியின்போதும் போட்டி முடிந்த பிறகும் யாருக்கும் கை குலுக்குவதில்லை என்ற முடிவில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர். இதனால் தேவையில்லாத பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறியுள்ளார். இந்தத் தொடரில் மருத்துவர்களின் அறிவுரைகளை தாங்கள் கடைப்பிடிக்கவுள்ளதாகவும் பெளச்சர் தெரிவித்துள்ளார்.
உரிய அறிவுறுத்தல் இருக்குமா?
அதேசமயம், இந்திய அணி நிர்வாகம் இதுபோல எந்த அறிவுறுத்தலையும் இந்திய வீரர்களுக்குக் கொடுத்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் சஹல் போட்டோவைப் பார்த்தால் நிச்சயம் இந்திய அணியும் ஏகப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. போட்டியினபோதும் இதுபோல முகமூடி அணிந்து ஆடுவார்களா என்றும் தெரியவில்லை.