மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் தான் விளையாட உள்ளது. அதற்குள் இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனை தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் அதிக ரன்கள் எடுத்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கில்லுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ருதுராஜ் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார்.
