For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அட இத மறந்துட்டோமே”.. இந்திய அணியில் இருக்கும் முக்கிய பிரச்சினை.. சுட்டிக்காட்டிய முன்னாள் வீரர்!

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணி சரி செய்ய வேண்டிய மிக முக்கிய பிரச்சினையை முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்த மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் இதுவரை அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. எனவே இந்த முறை தவறுகளை சரிசெய்ய காத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு இந்தாண்டு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி, இங்கிலாந்து அணியை புரட்டி எடுத்தது, நியூசிலாந்தை பழிவாங்கியது என தொடர் வெற்றிகள் தான் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தென்னாப்பிரிக்காவில் தான் அவர்களுக்கு முக்கிய சவாலே உள்ளது.

சிக்கல்

சிக்கல்

தென்னாப்பிரிக்க மண்ணில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. இதற்கு அங்குள்ள பிட்ச்-ன் தன்மையை உணராமல் இந்திய அணி வீரர்காள் பேட்டிங் செய்வது தான். இதனையடுத்து அவர்களுக்கு பவுன்சர் பந்துகளை அதிகம் எதிர்கொள்ள ஸ்பெஷல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

முக்கிய அட்வைஸ்

முக்கிய அட்வைஸ்

இந்நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். அதில், ஓப்பனிங் சரியாக அமையவில்லை என நினைக்கிறேன். ஓப்பனர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றால் ஒட்டுமொத்த அணியும் சொதப்பும். உதாரணத்திற்கு இங்கிலாந்து மண்ணில் ரோகித் - கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக ஆடினர். இதனால் இந்திய அணியுன் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை மயங்க் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்கின்றனர்.

Recommended Video

IND vs SA: Why Duanne Olivier will be Threat | OneIndia Tamil
அடுத்தடுத்து பின்னடைவு

அடுத்தடுத்து பின்னடைவு

அவர்கள் இருவருமே பாக்ஸிங் டே டெஸ்டில் தான் அறிமுகமானார்கள். தற்போது மீண்டு அதே தொடரில் இணைகிறார்கள். கடந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற போது கோலி தான் (286 ரன்கள்) அதிக ரன்கள் அடித்திருந்தார். வேறு யாரும் சிறப்பாக ஆடவில்லை. இந்த முறையும் அப்படி தான் உள்ளது. இந்திய அணியில் தற்போது மிடில் ஆர்டரில் ஆட அக்‌ஷர் படேல், ஜடேஜா இல்லை. ஓப்பனிங்கில் ரோகித் இல்லை. ரகானே, புஜாரா சரியான ஃபார்மில் இல்லை. இது பெரும் பிரச்சினையாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

Story first published: Saturday, December 25, 2021, 12:51 [IST]
Other articles published on Dec 25, 2021
English summary
Aakash chopra highlights India's major concern in India vs South africa 1st test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+