
ப்ளேயிங் 11 என்ன
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்குகிறார்கள். அதன்பிறகு விராட் கோலி, புஜாரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர்.

நீடிக்கும் குழப்பம்
ஆனால் அஜிங்கியா ரகானே - ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் ஆகிய 4 வீரர்களும் தங்களுக்கான இடம் கிடைக்குமா என பரபரப்புடன் காணப்படுகின்றனர். 5வது இடத்திற்கு முழு நேர பேட்ஸ்மேனை களமிறக்கினாலும், 7வது இடத்திற்கு யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது.

இளம் வீரருக்கு அதிர்ஷ்டம்
இந்நிலையில் இளம் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு அணியின் ப்ளேயிங் 11ல் இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடைசி நாள் பயிற்சி முகாமான இன்று ஷர்துலுக்கு தீவிர பேட்டிங் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மேற்பார்வை செய்து அறிவுரைகளை கூறியுள்ளனர். இதனால் அவரின் இடம் உறுதியாகிவிட்டது. ஸ்ரேயாஸ் ஐயர், ரகானே, ஹனுமா விஹாரி போன்ற சிறப்பான பேட்ஸ்மேன்கள் உள்ள போதும், ஷர்துலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
Recommended Video

என்ன காரணம்
தென்னாப்பிரிக்க களத்தில் வேகப்பந்துவீச்சு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பேட்டிங்கும் முக்கியம். அணியின் மிடில் ஆர்டரில் கோலி, புஜாரா, ரகானே போன்றவர்கள் ஃபார்ம் சிறப்பாக இல்லாததால், அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்க வேண்டும். அதன்படி தான் ஷர்துல் தாக்கூர் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கும் உதவுவார் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ராகுல் டிராவிட்டே விரைவில் அறிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications