
டெஸ்ட் போட்டி
இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணம் முதலில் ரத்து செய்யப்படவிருந்தது. மொத்தமாக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பால் டி20 தொடர் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மேலும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கவிருந்த டெஸ்ட் தொடர் 26ம் தேதியன்று மாற்றப்பட்டது.

புதிய பிரச்சினை
இப்படி மிகப்பெரிய மாற்றங்களுடனும், தயக்கங்களுடனும் தான் இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது செஞ்சூரினில் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் தொடரில் கொரோனா தனது வேலையை மோசமான முறையில் செய்துவிட்டது. எனவே அதே பிரச்சினை இங்கும் வந்துவிடக்கூடாது என்பதில் பிசிசிஐ தெளிவாக உள்ளது.

தென்னாப்பிரிககாவின் பெருந்தன்மை
இந்நிலையில் பிசிசிஐ-க்கு ஒத்துழைப்பு தருவதற்காக நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு முடிவை எடுத்துள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். பொருளாதார சிக்கலில் உள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், இந்தியாவுடனான தொடரின் மூலம் வரும் வருமானத்தை அதிகம் நம்பியுள்ளது. குறிப்பாக பார்வையாளர்களுக்கான டிக்கெட் விற்பனை ஏகபோகத்திற்கு இருக்கும்.

துணிச்சல் முடிவு
ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்படபோவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ அதிகாரிகள், இந்த விவகாரத்தில் கோரிக்கை வைத்ததாகவும் அதனை ஏற்று பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெறும் என உறுதியளித்துள்ளதாக தெரிகிறது. குறைந்தபட்சமாக 2000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க வாரியத்தின் நஷ்டத்திற்கு பிசிசிஐ வரும் காலத்தில் ஏதேனும் உதவி செய்யும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications