For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இதெல்லாம் ஏற்க முடியாது” அஸ்வின் தலைமையில் நடந்த திடீர் போராட்டம்.. நடுவரை சுற்றி வளைத்த சம்பவம்!

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினால் சிறிய போராட்டம் ஒன்று அரங்கேறியுள்ளது.

Recommended Video

Ashwin in contention for ICC Men's Test Player Award 2021 | OneIndia Tamil

இரு அணிகளும் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சம பலத்துடன் மோதி வருவதால் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

முதல் இன்னிங்ஸில் 130 ரன்களை முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 174 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

சிறு போராட்டம்

சிறு போராட்டம்

கடின இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கிய போது திடீரென ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானம் முழுவதும் பரபரப்பு. இதற்கு காரணம் மழையோ, வெளிச்சமின்மையோ அல்ல, சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தொடங்கி வைத்த போராட்டம் தான். இந்த போராட்டத்தில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

முதல் ஓவரை வீசச்சென்ற பும்ராவை தடுத்து நிறுத்திய அஸ்வின், நேராக நடுவரிடம் சென்று இந்த பந்து எங்களுக்கு வேண்டாம், வேறு ஒன்றை கொடுங்கள் எனக்கேட்டுள்ளார். இதனை ஏற்க முதலில் நடுவர் மறுத்துள்ளார். ஒவ்வொரு இன்னிங்ஸ் தொடங்கும் போது, பவுலிங் செய்யும் அணிக்கு புதிய பந்து வழங்கப்படும். பெட்டியில் இருந்து எந்த பந்து வேண்டுமோ அதனை அவர்களே தேர்வு செய்துக்கொள்ளலாம் என்ற சலுகை உள்ளது. ஆனால் நேற்று இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை.

பரபரப்பு கட்டம்

பரபரப்பு கட்டம்

இதனை கோலி உள்ளிட்ட மற்ற வீரர்கள் கவனிக்க தவறியபோதும், அஸ்வின் சரியாக கண்டறிந்தார். பின்னர் இதனை அனைத்து வீரர்களிடமும் கூற அனைவரும் நடுவரை சுற்றி வளைத்து புதிய பந்து வேண்டும் என கோரினர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இறுதியில் 3வது நடுவர் பந்து பெட்டியை கொண்டு வந்து, இந்திய அணியிடம் கொடுத்தார். அதில் அஸ்வின் சிறந்த பந்தை தேர்வு செய்து அணியினரிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அடுத்தடுத்து விக்கெட்கள்

அடுத்தடுத்து விக்கெட்கள்

அஸ்வின் தேர்வு செய்த அந்த பந்தில் தான் 4ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை சாய்த்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி தற்போது வரை 94 எடுத்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கையில் உள்ள 6 விக்கெட்களை வைத்து இன்னும் 211 ரன்களை சேர்க்க வேண்டும்.

Story first published: Thursday, December 30, 2021, 13:28 [IST]
Other articles published on Dec 30, 2021
English summary
‘We didn’t pick the ball’ Ashwin starts a protest with Virat Kohli for a few minutes in India vs South africa Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+