
இலங்கை சுற்றுப்பயணம்
இந்தியாவின் சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இளம் படையை கொண்ட இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் கடந்த 13ம் தேதியன்றே நடைபெறவிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஜூலை 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் படைக்கப்போகும் சாதனை குறித்து பார்க்கலாம்.

தவானின் சாதனை
இந்திய அணியின் கேப்டனாக செயல்படபோகும் அனுபவ வீரர் ஷிகர் தவான், இன்னும் 23 ரன்களை அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களை கடப்பார். இந்த மைல்கல்லை எட்டும் 5வது இந்திய ஓப்பனிங் வீரர் ஆவார். இதே போல 35 வயதில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஷிகர் தவான் தான் மிக அதிக வயதில் இந்திய அணியின் கேப்டன் ஆவார்.

நீண்ட வருட காத்திருப்பு
ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக திகழும் சஞ்சு சாம்சன் 5 ஆண்டுகள் மற்றும் 364 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார். இதுதான் ஒரு இந்திய வீரரின் மிக நீண்ட காத்திருப்பு ஆகும். இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சாளர்கள்
இந்திய அணியில் கடந்த சில தொடர்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல் இன்னும் 8 விக்கெட்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டுவார். அதே போல வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்னும் 12 விக்கெட்களை எடுத்தால் சர்வதேச ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்களை எடுத்த வீரர் ஆவார்.
Recommended Video

இந்திய அணியின் சாதனை
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மிகவும் பலமான ஒன்றாக தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு உதாரணம், சர்வதேச ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியை கடைசியாக 1997ம் ஆண்டில் தான் இலங்கை அணி வீழ்த்தியது. தற்போது நடைபெறும் தொடரில் இலங்கை வெற்றி பெற்றால், 24 ஆண்டு கால இந்திய அணியின் சாதனை தகறும்.


Click it and Unblock the Notifications











