
முக்கிய போட்டி
இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றுவிட்டதால், இலங்கை தொடரில் பங்கேற்றிருக்கும் இளம் படையை கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் அனுபவம் மற்றும் ஐபிஎல் இருந்த ஃபார்ம் ஆகியவற்றை மனதில் வைத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவதற்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

புது மைல்கல்
இந்நிலையில் கேப்டன் ஷிகர் தவான், இலங்கை தொடரில் பல்வேறு புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் தற்போது வரை அவர் 5,9977 ரன்களை அடித்துள்ளார். இன்னும் 27 ரன்களை அடித்தால் சர்வதேச ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை எட்டிய 10வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெறுவார். அதுமட்டுமல்லாமல் 5வது இந்திய ஓப்பனிங் வீரர் ஆவார்.

2வது இடம்
அதிவேகமாக 6000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவானை சேரவுள்ளது. அவர் 140 இன்னிங்ஸ்களில் இதனை செய்யவுள்ளார். விராட் கோலி 136 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். சவுரவ் கங்குலி 147 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி தற்போது 2வது இடத்தில் உள்ளார். ஒருவேளை ஷிகர் தவான் நாளை நடைபெறும் போட்டியில் 6000 ரன்களை கடந்துவிட்டால், சவுரவ் கங்குலியை முந்துவார்.
Recommended Video

பிற சாதனைகள்
35 வயது, 255 நாட்கள் ஆகும் ஷிகர் தவான் தான், மிகவும் அதிக வயதில் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் வீரர் ஆகும். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை தலைமை தாங்கும் 25வது கேப்டன் ஷிகர் தவான் ஆகும். நாளைய போட்டியில் தவான் இன்னும் 17 ரன்களை அடித்தால், இலங்கை எதிராக மிக வேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.


Click it and Unblock the Notifications