நாக்பூர்: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் அவுட் ஆனதை பாங்க்ரா ஆடி விராட் கோஹ்லி கொண்டாடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இலங்கையுடன் இந்திய அணி 2-ஆவது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. அப்போது இலங்கை வீரர் டிக்வாலா ஆடி கொண்டிருந்தார். 24 ரன்கள் எடுத்திருந்த அவருக்கு ஜடேஜா பந்து வீசினார்.
61-ஆவது ஓவரின்போது, அடித்து தூக்கப்பட்ட பந்தை இஷாந்த் சர்மா லாவகமாக பிடித்தார். இதையடுத்து உற்சாகம் அடைந்தார் விராட் கோஹ்லி.
உடனே ஒரு பாங்க்ரா ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால் ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.