
கோலிக்கு ஸ்பெஷல்
இந்த டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். ஏனென்றால் இது அவர் விளையாட போகும் 100வது டெஸ்ட் ஆகும். இந்திய கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்களால் மட்டுமே இந்த மைல்கல்லை எட்ட முடிகிறது. எனினும் கோலியின் 100வது ஆட்டத்தை கொண்டாட பிசிசிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

திடீர் அறிவிப்பு
ரசிகர்களுக்காவது போட்டியை காண அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று காலை திடீரென பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், வழக்கம் போல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கங்குலியின் பகை
இதனையடுத்து அனைவரின் கவனமும் கங்குலி மீது திரும்பியது. ஒரு வீரருக்கு பெரிய கவுரவமாக பார்க்கப்படும் 100வது டெஸ்ட் போட்டிக்கு பிசிசிஐ இப்படி செய்தது நியாயமே இல்லை என முன்னாள் வீரர்களே கூறினர். கவாஸ்கர் கடும் அதிருப்தி தெரிவித்தார். கங்குலி தனது தனிப்பட்ட பகையை மனதில் வைத்துக்கொண்டு கோலிக்கு இதுபோன்று இடையூறுகள் கொடுப்பதாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.

அவசர ஆலோசனை
ஏற்கனவே பிசிசிஐ மீது பல சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், கோலியின் விஷயத்தில் மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனையடுத்து பிசிசிஐ-ன் உயர்மட்ட குழு நேற்று அவசர அவசரமாக ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில் 50% அளவிற்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என முடிவெடுத்து தற்போது டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
Recommended Video

கங்குலியின் தோல்வி
பிசிசிஐ-க்குள் நடக்கும் பிரச்சினை வெளியுலகிற்கு வரும்போதும், அதன் முடிவு மட்டும் என்ன ஆனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கொடுக்கும் அழுத்தத்தால் ஒரு தனிப்பட்ட வீரரை தாக்க முடியாது என்பது நிரூபனம் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications