3 நாள் ரெஸ்ட்
இதனை ஏற்று கொண்ட பிசிசிஐ தற்போது அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது. தற்போது டி20 போட்டிகள் முதலில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் வரும் 20ஆம் தேதியோடு முடிவடைகிறது.இதனைத் தொடர்ந்து வெறும் 3 நாள் இடைவெளியில் இலங்கை தொடர் தொடங்குகிறது.
அட்டவணை
பிப்ரவரி 24ஆம் தேதி முதல் டி20 போட்டி லக்னோவிலும். வரும் 26ஆம் தேதி 2வது டி20 தர்மசாலாவிலும், அடுத்த நாளே 3வது டி20 அதே தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வரும் மார்ச் 4ஆம் தேதி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் மொஹாலியில் நடைபெறும்.
பகல் இரவு டெஸ்ட்
இதனைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் மார்ச் 12 ஆம் தேதி பெங்களூருவில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக முதல் டெஸ்ட் தான் பகல் இரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது விராட் கோலியின் 100வது டெஸ்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
100வது டெஸ்ட்
ஆனால், தற்போது முதல் டெஸ்ட் மொஹாலியில் நடைபெறுவதால், விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாக அது அமையும். இந்தப் போட்டியை பெரிய அளவில் கொண்டாட பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. கேப்டன்ஷிப் விவகாரத்தில் கிங்குலி, ஜெய்ஷா மீது அதிருப்தியில் விராட் கோலி ரசிகர்கள் உள்ளனர். அவர்களை கூல் செய்ய இந்த திட்டத்தை பிசிசிஐ அமல்படுத்தப்பட உள்ளது.