
கொரோனா உறுதி
பயோ பபுளில் இருக்கும் வீரர்களுக்கு வழக்கமாக இன்று செய்யப்பட்ட பரிசோதனையில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட் ஆகிய வீரர்கள் மற்றும் 3 அணி ஊழியர்கள் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பிசிசிஐ அறிவிப்பு
கொரோனா பரவல் ஏற்பட்ட போதும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. மேலும் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் களமிறங்குவதற்காக மயங்க் அகர்வால் அவசர அவசரமாக அணிக்குள் சேர்க்கப்பட்டார்.

அதிகரிக்கும் கொரோனா
இந்நிலையில் தற்போது மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அணியின் முன்னணி பவுலர்கள் அக்ஷர் பட்டேல், முகமது சைனி ஆகியோருக்கும் தான் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இந்திய அணியின் இன்றைய நாள் பயிற்சி முகாம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் முதல் ஒருநாள் போட்டியும் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது.

பிசிசிஐ அவசர ஆலோசனை
முன்னதாக இன்று காலை இதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ மூத்த அதிகாரி, இன்று மேலும் கொரோனா பாதிப்பு உறுதியானால், முதல் போட்டியை வேறு ஒருநாளுக்கு ஒத்திவைக்கப்படும் எனத்தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ அவசர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் போட்டி நடைபெற வாய்ப்பில்லை எனத்தெரிகிறது. 2வது ஒருநாள் போட்டி பிப்.9ம் தேதி நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











