
2வது டி20
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் டி20 போட்டி அனைத்தும் ட்ரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் தான் நடைபெற்றன. ஆனால் 2வது மற்றும் 3வது டி20 போட்டி செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று இரவு 7.30 மணிக்கு டாஸும் 8 மணிக்கு போட்டியும் தொடங்கவிருந்தது.

போட்டி நேரம் மாற்றம்
இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களே உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் திடீர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் 2வது டி20 போட்டி ஒத்திவைக்கப்படுவதாகவும், உள்ளூர் நேரப்படி பகல் 11.30 மணிக்கும், இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கும் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

குழப்பத்தில் ரசிகர்கள்
மழைப்பொழிவு கிடையாது, வெளிச்ச பிரச்சினை கிடையாது, ட்ரிண்டாட்டில் இருந்து இரு நாட்டு வீரர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்டனர். அப்படி இருந்தும் போட்டி தாமதமாவதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழப்பமடைந்திருந்தனர். அப்போது தான் வேடிக்கையான தகவல் வெளியானது.

என்னதான் காரணம்
இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட விளக்கத்தில், இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்த போதும், அவர்களின் உடமைகள் அனைத்தும் இன்னும் வார்னர் பார்க் மைதானத்திற்கு வந்து சேரவில்லை. அவர்களின் பேட், ஜெர்ஸிகள் என அனைத்து பொருட்களுமே வந்து சேர்வதற்கு தாமதமாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கிண்டல்
இதனை கேட்ட ரசிகர்கள், வீரர்களின் உடமைகள் நேரத்திற்கு வந்தடையவில்லை என்பதெல்லாம், போட்டியை ஒத்திவைப்பதற்கு ஒரு காரணமா? அவ்வளவு மோசமான ஏற்பாடு தான் செய்யப்பட்டுள்ளதா என மோசமாக விமர்சித்து வருகின்றனர். பிசிசிஐ தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் இன்னும் கொடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











