3வது போட்டி
இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு முறை கூட வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் மண்ணில் வைட் வாஷ் செய்தது கிடையாது. 39 ஆண்டுகளில் முதல் முறையாக அந்த சாதனையை படைக்க இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்டா சேட்டை
இந்நிலையில் இந்த பரபரப்புக்கு இடையே இந்திய அணி வீரர்கள் இன்ஸ்டாகிராமில் சேட்டை செய்துள்ளனர். ரசிகர்களுக்காக லைவ் காலில் வந்த ரிஷப் பண்ட், அதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரையும் சேர்த்தார். இதன்பின்னர் வேறு யாரை சேர்க்கலாம் என ரசிகர்கள் பல பெயர்களை தெரிவித்த போது, திடீரென தோனிக்கு அழைத்து ஆச்சரியம் ஏற்படுத்தினார்.
தோனி பேசியது என்ன
முதலில் அதனை சாக்ஷி தோனி எடுத்து ரசிகர்களுக்கு வணக்கம் கூறிய நிலையில், அடுத்ததாக தோனியின் முகத்தை காண்பித்தார். நீண்ட நாட்களுக்கு பின்பு அவரை சமூகவலைதளத்தில் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ரோகித்திடம் பேசிய ரிஷப் பண்ட் " தோனியை எப்படியாவது சிறிது நேரம் நேரலையில் இருந்து பேசவையுங்கள் எனக்கூறினார்" இதற்கு பதிலளித்த தோனி, சிரித்த முகத்துடன் அனைவருக்கும் "ஹாய்" என்று மட்டும் கூறிவிட்டு, வெளியேறிவிட்டார்.
டி20 கிரிக்கெட் தொடர்
வெஸ்ட் இண்டீஸுடனான டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சீனியர் வீரர்கள் விளையாடுகின்றனர். இதற்காக கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் ட்ரினிடாட் சென்றடைந்துள்ளனர். இரு அணிகளும் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 29ம் தேதி தொடங்குகிறது.