
இலங்கை தொடர்
இந்த தொடர் முடித்தவுடன் இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் பிப். 16, 18, 20ம் தேதிகளில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஒருநாள் தொடரை போன்று இந்த போட்டிக்கான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

முக்கிய வீரர்கள் நீக்கம்
இந்நிலையில் இதில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ, 2வது ஒருநாள் போட்டியின் போது கே.எல்.ராகுலுக்கு கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அக்ஷர் பட்டேல் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதால் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறவுள்ளனர்.

சிஎஸ்கே சிங்கம்
இந்த 2 வீரர்களுக்கு மாற்றாக சிஎஸ்கேவின் அதிரடி வீரர் ருதுராஜ் கெயிக்வாட் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் அணிக்குள் சேர்க்கப்பட்டு பின்னர் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார் ருதுராஜ் கெயிக்வாட். ஆனால் இந்த முறை கே.எல்.ராகுல் விலகியுள்ளதால் நிச்சயம் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்டத்தில் ஹூடா
இதே போல தீபக் ஹூடாவுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்ற ஹூடா லோயர் ஆர்டரில் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இதனையடுத்து அவருக்கு டி20 போட்டியிலும் பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications