16 வருடங்களில் முதல் முறை
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 16 வருடங்களில் அடிக்கப்பட்ட வேகம் குறைந்த அரை சதம் இதுவாகும். விராட் கோஹ்லி வர்ணித்ததை போல அந்த பிட்ச்சில் பந்துகள் அதி வேகமாக வந்தன.
வேகம் அதிகம்
பந்தின் வேகம் வழக்கத்தைவிட கணிக்க முடியாத வேகத்தில் இருந்ததால் டோணியால் சரியான நேரத்தில் ஷாட்டுகளை அடிக்க முடியவில்லை. அவ்வாறு செய்ய முடியாததால், ஃபீல்டர்கள் இல்லாத இடைவெளியை பார்த்து அடித்து ரன் சேகரிக்கவும் முடியவில்லை.
மற்றவர்கள் படு மோசம்
இதில் டோணி தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்தான். ஏனெனில் மற்ற பேட்ஸ்மேன்கள் மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவிலேயே அவுட்டாகிவிட்டனர். டோணி பிட்சின் தன்மையை நன்கு கணித்து சமாளித்து ஆடிவிட்டார்.
14 ரன்கள் தேவை
கடைசி 7 பந்துகளில் 14 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தபோது டோணியும், குல்தீப் யாதவும் களத்தில் நின்றனர். குல்திப் இந்தியாவுக்காக பேட் செய்த முதல் போட்டி அது என்பதால், அந்த பந்தை சிங்கிள் தட்டிவிட்டு கடைசி ஓவரை டோணி சந்தித்திருக்கலாம். ஆனால், கடைசி ஓவரில் 14 ரன்களை அடிக்க முடியுமோ என்னவோ என சந்தேகித்த டோணி, 49வது ஓவரின் கடைசி பந்தை தூக்கியடித்தார். ஆனால் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்தார். இதன்பிறகுதான் மே.இ.தீவுகள் வெற்றி உறுதியானது.