
ருத்துராஜ் கெய்க்வாட்
தொடக்க வீரராக கே.எல ராகுல் களமிறங்குவது அவசியமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஆசிய கோப்பை போட்டிக்கு முன் அவர் தனது பார்மை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் அவர் நாளைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஷிகர் தவானுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ருத்துராஜ் கெய்க்வாட்டை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம்.

ராகுல் திரிபாதி
ருத்துராஜ் கெய்க்வாட்டை கடந்த சில நாட்களாகவே எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் அணியில் நீடிக்கிறார். இதனால் அவருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்குவது அவசியம். இதேபோன்று இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 31 வயதான அனுபவ மற்றும் திறமையும் கலந்த ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு வழங்குவது முக்கியமாகும். இது போல் கிடைக்கும் ஒரு வாய்ப்புக்காக தான் அவர் பல முயற்சிகளை செய்திருக்கிறார்.

சுழற்சி முறை
மேலும் இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஷாபாஸ் அஹமதுக்கு நடுவரசையில் வாய்ப்பு வழங்கலாம். அக்சர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கிவிட்டு ஷாபாஸ் அகமதை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கலாம்.முகமது சிராஜிக்கு ஓய்வு வழங்கிவிட்டு தீபக்சாஹரையும் மீண்டும் அணிக்கு கொண்டு வரலாம். தீபக் சாஹருக்கு காயம் ஏதும் இல்லை என்றும் சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்காக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உத்தேச பிளேயிங் லெவன்
1.கேஎல் ராகுல், 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3, இஷான் கிஷன், 4, தீபக் ஹூடா, 5, ராகுல் திரிபாதி, 6, சஞ்சு சாம்சன், 7, ஷாபாஸ் அகமது, 8, தீபக் சாஹர், 9, ஷர்துல் தாக்கூர், 10, குல்தீப் யாதவ், 11, ஆவேஷ் கான்


Click it and Unblock the Notifications











