டோனி இல்லாட்டாலும் வலுவாத்தான் இருக்கு இந்தியா: பாக். கேப்டன் மிஸ்பா
கராச்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டோனி தலைமை வகிக்காவிட்டாலும் கூட இந்திய அணி வலுமையானது தான் எனப் பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் அணிக் கேப்டன் மிஸ்பா உல்-ஹக்.
5 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அணியின் இழப்பு...
ஆசிய கோப்பை போட்டியில் இருந்து டோனி விலகி இருப்பதன் மூலம் அவரது அனுபவத்தையும், கேப்டன்ஷிப்பையும் இந்திய அணி தவற விடுகிறது.

பொருத்தமான தேர்வு...
அதே நேரத்தில் அவருக்கு பதிலாக விராட் கோலியை இந்திய அணியின் கேப்டனாக்கி இருப்பது பொருத்தமான தேர்வு.

சவால்....
டோனி இல்லாவிட்டாலும் இந்திய அணி தொடர்ந்து வலுவானதாகவே இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் சவாலானவை என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்.

வெற்றி வேட்கை....
தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை கைப்பற்றிய நாங்கள் அதே வெற்றி வேட்கையுடன் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கிறோம்.

நம்பிக்கை...
இந்திய அணியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறோம்' என இவ்வாறு மிஸ்பா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications