சொதப்பிய ஓபனிங்
ஆண்டர்சன் வீசிய 5வது ஆஃப் ஸ்டம்ப் லைனில் சிக்கி சுப்மான் கில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கவுண்டி கிரிக்கெட்டில் சதம் சதமாக விளாசியதால் , இந்த தொடரில் பெரிதாக சாதிப்பார் என எதிர்பார்த்த புஜாரா, 13 ரன்களில் வெளியேறினார். ஆட்டத்தின் 20.1வது ஓவரின் போது மழை குறுக்கிட்டது.
வீணான வாய்ப்பு
அப்போது ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை தடைப்பட்டது. கரு மேகங்கள் சூழ்ந்ததால் பந்து நன்கு ஸ்விங் ஆக இந்திய வீரர்கள் தடுமாறினர். விஹாரி தமக்கு கிடைத்த கேட்ச் மிஸ் வாய்ப்பை பயன்படுத்தாமல் 53 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார். இதனையடுத்து அவனைவரின் பார்வையும் விராட் கோலி மீது திரும்பியது.
கோலி ஏமாற்றம்
விராட் கோலி பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடினார். கடந்த முறை இங்கு விராட் கோலி சதம் விளாசியதால், அந்த அனுபவம் கைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்தார். 19 ரன்கள் எடுத்திருந்த போது பாட்ஸ் வீசிய பந்தை கணிக்க முடியாத விராட் கோலி, அதை லீவ் செய்தார்.
இந்தியா தடுமாற்றம்
ஆனால், அது ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனையடுத்து விராட் கோலி ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி திரும்பினார். இதனையடுத்து களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், பாசிட்டிவாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். ஆனால் லெக் சைடு சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். இதன் மூலம் 98 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.