
மூன்று ஸ்பின் பவுலர்
இன்று மூன்று ஸ்பின் பவுலர்களை களமிறக்கி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை காலி செய்துவிடலாம் என்று இந்திய அணி நினைத்தது. இதனால் இந்திய கேப்டன் கோலி மூன்று ஸ்பின் பவுலர்களை களமிறக்கினார். அஸ்வின், சுந்தர், நதீம் ஆகிய மூன்று ஸ்பின் பவுலர்கள் இந்திய அணி சார்பாக இன்று களமிறங்கினார்கள்.

எப்படி
முதலில் ஸ்பீட் பவுலர்களை பவுலிங் செய்ய வைக்கலாம். அதன்பின் வரிசையாக மூன்று ஸ்பின் பவுலர்களை போட செய்து விக்கெட் எடுக்கலாம் என்பதுதான் கோலியின் பிளானாக இருந்தது. மூன்று பேரை மாற்றி மாற்றி பவுலிங் செய்ய வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை காலி செய்யலாம் என்று கோலி நினைத்தார்.

மோசம்
ஆனால் தோனி கொஞ்சம் கூட நினைக்காத அளவிற்கு மிகவும் சிறப்பாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆடினார்கள். சிப்லி, பர்ன்ஸ், ஜோ ரூட் என்று மூன்று பேருமே இந்திய ஸ்பின் பவுலர்களை நன்றாக எதிர்கொண்டார்கள். பிட்ச் பிரஷ்ஷாக இருப்பதை பயன்படுத்தி அதிரடியாக ஆட தொடங்கினார்கள்.

வெளுத்தனர்
அஸ்வினின் பவுலிங்கில் பெரிய அளவில் அதிரடி காட்டாமல் அனுபவம் இல்லாத வீரர்கள் பவுலிங்கை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து வெளுத்தனர். நதீம், சுந்தர் ஓவர்களை குறி வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்தனர்.இவர்களின் ஓவரில் குறி வைத்து பவுண்டரிகளாக அடித்தனர்.

சின்ன
சின்ன பசங்களை குறி வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்தனர். இதனால் விக்கெட் எடுக்க முடியாமல் கோலி ஒரு கட்டத்தில் திணற தொடங்கினார். இதனால் தற்போது மாறி மாறி பவுலர்களை களமிறக்கி வருகிறார். ஆனால் இதுவரை இன்னும் விக்கெட் விழவில்லை.


Click it and Unblock the Notifications