
சென்னை
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆடிய விதம் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இந்திய பவுலர்கள் பலர் கேள்விக்கு உள்ளாகி உள்ளனர்.இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 5 பவுலர்கள் களமிறங்கினார்கள்.

களமிறங்கினார்கள்
மொத்தம் 3 ஸ்பின் பவுலர்கள், 2 ஸ்பீட் பவுலர்கள் களமிறங்கினார்கள். இதில் என்ன சிக்கல் என்றால் இந்திய பவுலர்கள் மொத்தம் 52 எக்ஸ்ட்ரா பந்துகளை இரண்டு இன்னிங்சிலும் வீசினார்கள். இதில் 27 நோ பால் பந்துகளை இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வீசினார்கள் .

மோசம்
அதிலும் நதீம்தான் மிக அதிகமான நோ பால் பந்துகளை வீசினார். அவருக்கு அடுத்தபடி பும்ரா அடுத்தடுத்து நிறைய நோ பால் பந்துகளை வீசினார். இதில் நதீம் சரியாக ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் நோ பால் பந்துகளை மிக துல்லியமாக வீசினார். இதுதான் சரியாகி உள்ளது.

ஸ்பின்
நதீம் போன்ற ஸ்பின் பவுலர்கள் எப்படி இவ்வளவு நோ பால் பந்துகளை வீசுகிறார்கள். பும்ரா வீசுவதை கூட ஒப்புக்கொள்ளலாம், ஆனால் ஸ்பின் பவுலர் எப்படி இவ்வளவு நோ பால் பந்துகளை வீசுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் 52 எக்ஸ்ட்ரா பந்துகளை வீசி உள்ளனர்.

கோபம்
டெஸ்ட் போட்டியில் பவுலர்கள் இப்படி எக்ஸ்ட்ரா வீசுவது நிறைய சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி உள்ளது. உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இந்திய பவுலர்களை இதனால் விமர்சனம் செய்துள்ளனர். இந்திய பவுலர்கள் இப்படி நோ பால் வீசுவது சந்தேகம் தருகிறது என்றுள்ளார்.

பயிற்சி
வீரர்கள் முறையான பயிற்சி இன்றி இறங்கிவிட்டனரோ.. அதும் நதீம் பவுலிங் எல்லாம் அண்டர் 19 வீரர் ஆடுவதை விட மோசமாக இருக்கிறது. இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் இதை கவனிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications