ரோகித், ராகுல், விராட் கோலி அபாரம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி வீரர்கள் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் மற்றும் விராட் கோலி முறையே, 63, 77 மற்றும் 85 ரன்களை அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிக்ஸ், பவுண்டரிகள் விளாசல்
இந்த போட்டியில் 85 ரன்களை அடித்து கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்க 30 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து இறுதிநேர பார்ட்னர்ஷிப்பில் அணியை வெற்றிபெற வைத்தனர். இருவரும் சிக்ஸ், பவுண்டரிகளை விளாசி தள்ளினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல்
இந்த போட்டியில் எட்டாவது ஆட்டக்காரராக களமிறங்கிய பௌலர் ஷர்துல் தாக்கூர், 6 பந்துகளில் 17 ரன்களை அடித்தார். ஒரு சிக்ஸ் மற்றும் 2 பவுண்டரிகளை அவர் அடித்து இறுதி நேரத்தில் பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
|
மராத்தியில் பாராட்டிய கேப்டன்
இந்நிலையில் குறைந்த பந்துகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூருக்கு டிவிட்டர் மூலம் கேப்டன் விராட் கோலி தனது பாராட்டுக்களை மராத்தியில் தெரிவித்துள்ளார்.
|
விராட், ஷர்துலுக்கு பாராட்டு
கோலியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், கேப்டன் விராட் கோலி மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரையும் பாராட்டித் தள்ளினர்.