டிக்கெட் முன்பதிவு
பயணத்துக்கான விமான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர், விரைவில் இந்திய அணி இங்கிலாந்து புறப்படும் வகையில் பயண ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருந்தன.
விமான சேவை நிறுத்தம்
ஆனால், கடந்த வாரம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை முழுவதுமாக நிறுத்தியது. அந்த விமானத்திலேயே இந்திய அணி வீரர்கள் பயணம் செய்ய 30 பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.
புதிய சிக்கல்
இதனால், திட்டமிட்டபடி இந்திய அணி புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, மற்ற விமானங்களில் பயணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருக்கை வசதி இல்லை
ஆனால், அனைத்து வீரர்களும் ஒரே விமானத்தில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சில வீரர்கள் தங்களது இருக்கை வசதிகளை சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று கிரிக்கெட் நிர்வாகம் கூறி இருக்கிறது.