இன்ஸ்டா லைவ்
தினேஷ் கார்த்திக்,ரோகித் சர்மா ,ரிஷப் பண்ட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த பயணத்தில் இருந்தனர். இந்த நிலையில் வீரர்கள் தங்களது ஹோட்டலுக்கு சென்று இரண்டு நாள் குவாரன்டைனில் உள்ளனர். அப்போது நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனியாக இருக்கும் பொழுதை கழிக்கும் வகையில் இன்ஸ்டாவில் லைவ் நடத்தினார்.

ஷாக்சி தோனி
இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர் .இப்போது ரிஷப் பன்ட் தோனிக்கு வீடியோ கால் செய்து இந்த நேரலையில் பங்கேற்க வைத்தார். அப்போது தோனியின் மனைவி சாக்ஷி ரிஷப் பண்டிற்கு ஹாய் சொன்னார்.

நேரலையில் கிண்டல்
அதன் பின்னர் தோனியை பார்த்து நன்றாக பொழுதை கழிக்கிறீர்கள் என்று ரிசப் பண்ட் ஹிந்தியில் கூற சிரிப்பை அடக்க முடியாத தோனி உடனே கேமராவில் கையை வைத்து மறைத்துக் கொண்டார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்குள் நடத்திய இந்த நேரலை பல ரசிகர்களும் கண்டுகளித்தனர்.

டி20 தொடர்
ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில் கடைசி போட்டி நாளை இந்திய நேரப்படி ஏழு மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் டி20 போட்டி வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி, பும்ரா ஆகியோர் இல்லை. பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளன.


Click it and Unblock the Notifications











