முதல் டெஸ்ட்டுக்கு முன்பாக முரளி விஜய் காயம்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயமடைந்துள்ளார். பயிற்சி ஆட்டத்தின் முதல் நாளில் அவரால் ஆட முடியாமல் போய் விட்டது.
இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் சரியாகி விடுவார் என நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 12ம் தேதி காலே நகரில் முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே தொடங்குகிறது.

நேற்று தொடங்கிய 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் முரளி விஜய்யால் விளையாட முடியாமல் போனதால் கே. எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை எடுத்திருந்தது. அஜிங்கியா ரஹானே சதம் அடித்தார்.
Story first published: Friday, August 7, 2015, 8:09 [IST]
Other articles published on Aug 7, 2015


Click it and Unblock the Notifications