
அபாரமான ஆட்டம்
அதன் பிறகு... கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்பும் இணைந்து அபாரமாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 192 ரன்களை குவித்தது. கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழக்க, ஹேண்ட்ஸ்கம்ப் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

டெத் ஓவர்களின் பலன்
அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை கையில் எடுத்தது டர்னர். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர்களான புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரின் பவுலிங்கை அவர் வெளுத்து வாங்கினர்.

ரன் குவித்தார்
அதுவும் எப்படி தெரியுமா... வெறும் 43 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்தார் டர்னர். இத்தனைக்கும் மேக்ஸ்வெல் அவுட்டான பிறகு.. அதுவும் 37வது ஓவரில் தான்டர்னர் களத்துக்கே வந்தார்.அதன்பிறகு தான் அவரின் காட்டடி தொடங்கியது.

கட்டுக்கோப்பான பந்துவீச்சு
ஒரு கட்டத்தில் பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக இருந்த இந்திய அணி, அதன் பின்னர் தான் வாரி வழங்கியது. புவனேஷ்வர் குமார் 5 ஒவர்களில் 18 ரன்கள் தான் கொடுத்திருந்தார்.

பும்ரா 63 ரன்கள்
அதன்பின்னர் டர்னரின் காட்டியால்.. 9 ஓவர்கள் 67 ரன்களை வாரி கொடுத்து விட்டு போனார். பும்ரா 8.5 ஒவர்களில் 63 ரன்கள் என்று அள்ளி கொடுத்தார்.

5 ஓவர்களிலும் ரன்கள்
கேதார் ஜாதவுக்கு தாம் வீசிய 5 ஓவர்களிலும் ராசியில்லை. 2 ஓவர்களிலேயே அவரிடம் இருந்து பந்தை வாங்கி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மீண்டும் பந்தை தர... மொத்தம் 44 ரன்களை வாரி வள்ளலாக கொடுத்தார்.

80 ரன்கள் எதுக்கு?
அனைத்துக்கும் மேலாக தாராளமயமாக இருந்தவர் சாஹல். சும்மா சொல்லக் கூடாது. மொத்தம் வீசியது 10 ஓவர்கள்... கொடுத்ததோ 80 ரன்கள்.

ஸ்பின்னில் 188 ரன்கள்
குல்தீப் யாதவ் 10 ஒவர்களில் 64 ரன்களையும் கொடுத்தனர். ஸ்பின்னர்கள் சேர்ந்து 25 ஓவர்களில் 188 ரன்கள் வாரி வழங்கினர். அனைவரின் பந்தையும் பேட்டால் துவம்சம் செய்து அதிரடி காட்டினார் டர்னர்.

தொடரை வெல்ல வேண்டும்
ஆக...உலக கோப்பைக்கு முந்தைய தொடர் என்பதை இந்தியா மனதில் கொள்ள வேண்டும். வாழ்வா, சாவா என்ற கடைசி போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்ற வேண்டும்.


Click it and Unblock the Notifications











