|
பிசிசிஐ ட்விட்டர் பதிவு
பிசிசிஐ இதை படம் பிடித்து ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் மகிழ்ச்சியான முகத்துடன் இந்திய வீரர்கள் மற்றும் கேம் விளையாடும் பசங்க என குறிப்பிட்டு இந்திய வீரர்கள் பிரபலமான விளையாட்டான PUBGயை விளையாடி வரும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தது.
இந்திய அணியில் PUBG பைத்தியம்
முன்பெல்லாம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு நேரத்தில் பாட்டு கேட்பார்கள், புத்தகம் படிப்பார்கள். தற்போது ஆன்ட்ராய்டு காலத்தில் வீடியோ கேம் ஆடி மகிழ்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் மிக பிரபலமாக இருக்கும் ஒரு விளையாட்டு PUBG ஆகும். இந்தியாவிலும் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது.
ஆர்வம் இல்லாத இருவர்
வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போதும் இந்திய வீரர்கள் தோனி உட்பட அனைவரும் இந்த விளையாட்டை ஆடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது வெளியிட்ட புகைப் படத்திலும், இப்போது வெளியிட்ட புகைப்படத்திலும், இந்த வீடியோ கேம்களில் ஆர்வம் இல்லாமல் இருப்பவர்கள் என பும்ரா மற்றும் ஷிகர் தவானை நம்மால் கூற முடியும்.
அந்த மனிஷ் பாண்டே..
பிசிசிஐ வெளியிட்ட புகைப்படங்களை வைத்து பார்த்தால் ரோஹித் சர்மா, தோனி, கேதார் ஜாதவ், க்ருனால் பண்டியா, மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் PUBG விளையாடுவதில் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்து ஒரு ரசிகர், "மனிஷ் பாண்டே இந்திய அணியில் PUBG விளையாடுவதற்கு என்றே இருக்கிறார்" என கூறி இருக்கிறார். அவர் இந்திய அணியில் இருந்தாலும் அதிகம் களம் இறங்கும் வாய்ப்பு பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்.