வரலாற்று வெற்றியுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள்... விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு
டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி.
இதையடுத்து இன்றைய தினம் நாடு திரும்பிய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சில தினங்கள் தங்களது குடும்பத்தினருடன் செலவழிக்க உள்ள அணி வீரர்கள் இங்கிலாந்து தொடரையொட்டி வரும் 27ம் தேதி சென்னை வரவுள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடர்களை வெற்றி கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கேப்டன் ரஹானே, கோச் ரவிசாஸ்திரி உள்ளிட்டவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரும் 5ம் தேதி சென்னையில் துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக வரும் 27ம் தேதி வீரர்கள் சென்னை வரவுள்ளனர். இதற்கு இடையில் சில தினங்கள் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை சிறப்பாக செலவழிக்க உள்ளனர். வரும் 27ம் தேதி சென்னை வரவுள்ள வீரர்கள், 3 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டு பின்பு தங்களது பயிற்சிகளை துவங்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications