மும்பை: அம்பையர் பற்றி கமெண்ட் அடித்த, இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் வினோத் பட்கேவிற்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி கான்பூரில் நடந்தது. அதில் அம்பையராக பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த சர்வதேச நடுவர், வினீத் குல்கர்னி, பல்வேறு தவறான தீர்ப்புகளை கொடுத்ததால் தென் ஆப்பிரிக்கா வென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

செய்தி வெப்சைட் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்திய அணி மேலாளர் வினோத் பட்கேவும் அக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபற்றி விசாரணை நடத்திய ஐசிசி, வினோத் பட்கே, கிரிக்கெட் விதிமுறைகளை மீறி அம்பையர் முடிவை விமர்சனம் செய்துள்ளார் என்பதை உறுதி செய்தது. இதையடுத்து அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.