
நாட்டிங்காம் : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பின், இந்திய அணி இன்னும் பயிற்சிகளை தொடங்கவில்லை என்ற செய்தி வந்துள்ளது. மூன்றாவது போட்டி நடக்கும் நாட்டிங்காம் நகருக்கு புதன்கிழமை சென்ற இந்திய அணியினர், வியாழன் முதல் தான் பயிற்சிகளை தொடங்க உள்ளனர் என கூறப்படுகிறது. அதுவும் மொத்தம் இரண்டு அமர்வுகள் மட்டுமே நடைபெறும் என தெரிகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது போட்டி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இந்திய வீரர்களின் மோசமான பேட்டிங் கடும் அதிர்வலைகளை எழுப்பியது.
