
டி20 உலகக் கோப்பை
இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கடந்த ஆண்டு பரிசுத் தொகை, இனிமேல் தான் வழங்கப்பட உள்ளதாம். அந்தளவுக்கு எங்களுக்கு வருமான நெருக்கடி என்கிறது பிசிசிஐ. கடந்த ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில், இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது.

வெளிச்சத்துக்கு வந்த உண்மை
இதனால் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய runner-up பரிசுத் தொகையான 500,000 அமெரிக்க டாலரில் இருந்து தங்கள் பங்கை வீராங்கனைகள் இந்த வார இறுதிக்குள் பெறுவார்கள் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு இன்னும் உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தாமதத்திற்கு காரணம்
இதுகுறித்து அந்த அதிகாரி பிடிஐ-யிடம் கூறுகையில், "இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் இந்த வார இறுதிக்குள் தங்கள் பரிசுத் தொகையின் பங்கைப் பெறுவார்கள். இதற்கான பணப்பரிமாற்றம் தொடங்கிவிட்டது. அவர்கள் விரைவில் தங்கள் பங்கைப் பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தான் நாங்களே பரிசுத் தொகையை நாங்கள் பெற்றோம். அது தான் இந்த தாமதத்திற்கு காரணம்.

ஒரே மாதிரியானது தான்
இது பெண்கள் அணிக்கு மட்டும் ஏற்பட்ட தாமதம் அல்ல. இது ஆண்கள் அணியின் central contract, சர்வதேச போட்டிக் கட்டணம், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் உள்நாட்டு போட்டிகளின் கட்டணம் என அனைத்து வித கட்டணங்களும், தற்போது நிலவும் மோசமான சூழ்நிலை காரணமாக தாமதமாகும். எனவே, இந்த விஷயத்தில் பிசிசிஐ எப்போது தொகை பெற்றது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த கால தாமதம் என்பது ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் ஒரே மாதிரியானது தான்" என்று முடித்தார்.


Click it and Unblock the Notifications