For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்று சாம்பியனானது இந்திய மகளிர் அணி!

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்ற ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியது.
 

By Kalai Mathi

போச்ப்ஸ்ட்ரூம்: தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்ற ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிரணி சாம்பியனானது.

இந்தியா, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய ஒருநாள் போட்டித் தொடர், தென் ஆப்ரிக்காவில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின.

லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 24 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களை பிடித்து பைனலுக்கு முன்னேறின. இந்த நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது.

156 ரன்களில் சுருண்டது

156 ரன்களில் சுருண்டது

இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்கா 40.2 ஓவரில் 156 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 3 விக்கேட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும், ஏக்தா பிஷ்ட், தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

33வது ஓவரிலேயே வெற்றி

33வது ஓவரிலேயே வெற்றி

அடுத்து களமிறங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 33வது ஓவரிலேயே இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்தியா 33 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், பூனம் ராவுத் - கேப்டன் மித்தாலி ராஜ் ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.

8 விக்கெட் வித்தியாசத்தில்

8 விக்கெட் வித்தியாசத்தில்

பூனம் ராவுத் 70 ரன்களும் கேப்டன் மித்தாலி ராஜ் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றியது.

100 வது போட்டி

100 வது போட்டி

இறுதிப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக பூனம் ராவுத், தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கேப்டனாக மித்தாலி ராஜ் களமிறங்கிய 100வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 22, 2017, 15:03 [IST]
Other articles published on May 22, 2017
English summary
Indian women's cricket team took trophy in a one-day tournament in 4 nations held in South Africa
 Indian women's team took trophy in a one-day tournament in 4 nations held in South Africa. Indian women's champion was beaten by South Africa in 8 wickets.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+