Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: ஒரே இடத்திற்கு 2 பேர் போட்டி.. ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

நாக்பூர்: டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் யாருமே எதிர்பாராத வகையில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் ரிங்கு சிங் இருப்பாரா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டி நாக்பூரில் புதன்கிழமை இரவு தொடங்குகிறது.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை டெத் ஓவர்களில் (17-20) குறைந்தது 200 டி20 சர்வதேச ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்களில், சூர்யகுமார் (228.49) மற்றும் ரோஹித் ஷர்மா (217.24) ஆகியோருக்குப் பிறகு ரிங்கு சிங் (207.75) மூன்றாவது சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். சூர்யகுமார் மற்றும் ரோஹித் இருவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். அவர்கள் பொதுவாக டெத் ஓவர்கள் தொடங்கும் போது செட் ஆகி இருப்பார்கள்.

ரிங்கு, இந்த ஃபார்மேட்டில் இந்தியாவின் சிறந்த ஃபினிஷர். டெத் ஓவர்களில் அவரது சராசரி 38.28. இதன் மூலம் கீழ்வரிசையில், ஒரு சிறந்த தூணாக பேட்டிங் வரிசையில் ரிங்கு சிங் இருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் அணியில் இல்லை. கில் மீண்டும் டாப் ஆர்டருக்குத் திரும்பியபோது, மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பருக்கு இடம் கொடுக்க வேண்டி வந்தது. இதனால் ரிங்கு நீக்கப்பட்டார்.

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வெறும் இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பவுண்டரி மட்டுமே அடித்த அவர், இப்போது மீண்டும் களத்திற்குத் திரும்புகிறார்.தற்போது விக்கெட் கீப்பரான சாம்சன், டாப் ஆர்டருக்குத் திரும்பியதால், ரிங்கு மீண்டும் 6 அல்லது 7வது வரிசையில் களமிறங்க முடியும். ஆனால் தற்போது அதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடங்கியதிலிருந்து இந்தியா விளையாடிய 16 டி20 சர்வதேச போட்டிகளில் ஒன்றைத் தவிர அனைத்திலும் ஷிவம் துபே விளையாடியுள்ளார். பேட்டிங்கில் அவரது புள்ளிவிவரங்கள் சாதாரணமானதாக இருந்தாலும், அவர் சில நேரங்களில் பயனுள்ள அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவரது மீடியம் பேஸ் பந்துவீச்சு தேவைப்படும்போதெல்லாம் நன்றாக செயல்பட்டுள்ளார்.

இதனால் ரிங்கு சிங்கா, சிவம் துபேவா என்ற குழப்பம் எற்பட்டுள்ளது. இந்தத் தேர்வு ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தது இருக்கலாம். சிவம் துபே அணியில் இருந்தால், இந்திய அணி 2 ஸ்பெஷிலிட் வேகப்பந்துவீச்சாளரை வைத்து கொண்டு, குல்தீப் யாதவை 3வது ஸ்பின்னராக சேர்க்கலாம். மேலும், கம்பீருக்கு ஆல்ரவுண்டர்களை தான் அதிகம் பிடிக்கும் என்பதால், அவருடைய சாய்ஸ் சிவம் துபேவாக இருக்கலாம்.

இறுதியாக, ரிங்கு சிங் அல்லது சிவம் துபே ஆகியோரில் யாரைத் தேர்வு செய்வது என்ற கடினமான முடிவு, ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டிச் சூழலைப் பொறுத்தது. சிவம் துபே அணியில் இடம் பெற்றால், இந்திய அணி இரண்டு சிறப்பு வேகப்பந்துவீச்சாளர்களுடன் குல்தீப் யாதவை மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராகக் களமிறக்கும் வாய்ப்பைப் பெறும். அனைத்துத் துறை வீரர்களை அதிகம் விரும்பும் கௌதம் கம்பீரின் தேர்வு, சிவம் துபேவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, January 20, 2026, 9:01 [IST]
Other articles published on Jan 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+